Tuesday, August 14, 2007

வா !!



என்னுள் இருப்பவளே,
என்னை விட்டு வெளியே வா !!
என் இதயத்தை வதைத்தது போதும்,
என்னை விட்டு வெளியே வா !!
என் சிந்தனைகளை சிதைத்தது போதும்,
என்னை விட்டு வெளியே வா !!

என் எழுதுகோளின் வழியாக வா !!
சிறு கவிதையாக வா !!
ஒரு கதையாக வா !!
பெரும் காவியமாக வா !!
கற்பனை கடலாக வா !!
இன்னொரு காதலாகவும் வா !!

-வில்ஸ்

Monday, February 19, 2007

மகாகவி பாரதியார்



தூண்டுகோல்

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
- மகாகவி பாரதியார்.